• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்றத்தில்  நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடையவேண்டும்! -ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடையவேண்டும்! -ரஞ்சன் ராமநாயக்க

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/26
in இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
69 1
A A
0
34
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடைவதற்கு மக்களின்  ஆதரவு வேண்டும் ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எம்மிடம் சிலர் எதற்காக புதியக் கட்சியை ஸ்தாபித்தீர்கள் என்று கேட்கிறார்கள். கடந்த காலங்களில் நான் எனது வாழ்க்கையில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்தேன். ஒரு வருடமும் 8 மாதங்களும் நான் சிறையில் இருந்தேன். கொலை செய்தோ, திருடியோ, போதைப்பொருள் கடத்தியோ, பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியோ சிறைக்குச் செல்ல வில்லை. நான் எதற்காக சிறைக்குச் சென்றேன் என்பதை அனைத்து மக்களும் அறிவார்கள்.

நான் அங்குணுகொலபொலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டேன். அங்கு ஜே.வி.பி. மாநாட்டில் தாக்குதல் நடத்திய நாமல் ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவருடன்தான் இருந்தேன். என்னை சிறைச்சாலையிலேயே கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்கள். நான் அந்த சிறைச்சாலையில் பெரும் சிரமங்களுக்கு உள்ளானேன். கொரோனா காலம் என்பதால், என்னை பார்க்க உறவினர்களுக்குக்கூட அனுமதியில்லை.

நான் வெளியே வந்தவுடன் பலரும் மீண்டும் நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்டார்கள். அந்த மக்களின் கோரிக்கைக்கு இணங்கத்தான் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். திருடர்கள் இருக்கும் கட்சியில் இருக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால், அவர்கள் இருக்கும் அதே நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடையவேண்டும். இதற்கு மக்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

நாம் இன்று தூய்மையானவர்களுடன் இணைந்து எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். எனவே, நாம் போட்டியிடும் 9 மாவட்டங்களிலும் பெரும் வெற்றி பெற வேண்டும். நான் சிறைக்குச் சென்று வந்த பின்னர் பல நாடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தோம். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் சுதந்திரத்திற்குமுன்னர் எம்மை விட பின்தங்கிய நிலையில் இருந்தன. ஆனால், இந்த நாடுகள் எல்லாம் இன்று எங்கோ சென்று விட்டன.

நான் எந்தவொரு காலத்திலும் கொள்ளையடித்தது கிடையாது. அத்தோடு, நான் திருமணமும் செய்துக் கொள்ளவில்லை. எனவே, நான் சொத்துக்களை எனது குடும்பத்திற்காக சேர்க்க வேண்டிய தேவை இல்லாத காரணத்தினால்தான் பலரும் எனக்கு உதவிகளை செய்ய முன்வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சிறியதொரு அறிவிப்பைத்தான் விடுத்தேன். ஆனால், இதனைக் கேட்டு பிரதான கட்சிகளுக்கு பொறுத்துக் கொள்ள முடியாதுள்ளது. இதனால்தான் எனக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை பேர் இருக்கும்போது, எனக்கு எதிராக மட்டும் ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும். காரணம், நான் கசப்பான உண்மைகளை கதைப்பதால் தான்….

எனது மாமாவான விஜயகுமார துங்க அரசியலுக்கு வந்தபோதுகூட, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் அஞ்சினார். அவருக்கு நக்சலைட் என்று முத்திரைக் குத்தி 3 மாதங்கள் சிறையிலும் அடைத்தார்கள். ஏன் இப்படி அஞ்ச வேண்டும்?

நான் எந்தவொரு சட்டவிரோத செயற்பாட்டிலும் ஈடுபட வில்லை. எனினும், நாம் அரசியல் திருடர்களுக்கு பாரிய சவாலாக மாறியுள்ளமையால்தான் எனது அரசியல் பயணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று இவர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

நான் மக்களின் நண்பன். எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டேன். எமது கட்சி மீது நம்பிக்கை வையுங்கள். குரல் இல்லாதவர்களின் குரலாக எமது கட்சி ஒலித்துக் கொண்டிருக்கும்” இவ்வாறு ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: UDVஐக்கிய ஜனநாயகக் குரல்ரஞ்சன் ராமநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

75 வருடங்களாக நாம் செய்த பிழையை இனிமேல் செய்யக் கூடாது! -பெத்தும் கேணர்

Next Post

மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்!- திலகரத்ன டில்ஷான்

Related Posts

பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!
இலங்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-04
ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!
இலங்கை

ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

2025-12-04
நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!
இலங்கை

நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!

2025-12-04
2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை
இலங்கை

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

2025-12-04
சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
இலங்கை

சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

2025-12-04
குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!
இலங்கை

குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!

2025-12-04
Next Post
மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்!- திலகரத்ன டில்ஷான்

மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்!- திலகரத்ன டில்ஷான்

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க புதிய சட்ட விதிகள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-கண்காணிப்பாளர்கள் வருகை!

எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!

பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!

0
ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

0
நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!

நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!

0
2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

0
சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

0
பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!

பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-04
ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

2025-12-04
நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!

நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!

2025-12-04
2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

2025-12-04
சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

2025-12-04

Recent News

பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!

பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-04
ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

2025-12-04
நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!

நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!

2025-12-04
2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

2025-12-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.