வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருணாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.