2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிதியமைச்சராக 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.