கனடாவின் டொரொண்டோவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று முன்தினம் பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அடுக்கு மாடிக்குடியிருப்பின் 6 ஆவது மாடியில் இத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் பொலிஸார் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தவர்களை மீட்டுள்ளதுடன் தீப்பரவலையும் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இத்தீவிபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.