2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
இன்று (17) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அதன்படி, நாட்டின் 79 ஆவது வரவு செலவுத் திட்ட உரையான 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.