2025 பெப்ரவரியில் 232,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தகவலின்படி 2025 பெப்ரவரி 01 முதல் 27 வரை மொத்தம் 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகபட்சமாக 34,006 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர், அதைத் தொடர்ந்து 29,241 பேர் ரஷ்யாவிலிருந்தும், 24,830 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா, போலந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
எனினும், 2025 பெப்ரவரியில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை 2025 ஜனவரியில் பதிவுசெய்யப்பட்ட வருகையை (252,761) விட சற்று குறைவாகவே உள்ளது.
எவ்வாறெனினும் SLTDA தகவலின்படி, இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கைக்கு 485,102 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.