2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அதன்படி இன்றைய தினம் துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி எதிர்கொண்டிருந்தது.
இதில் விராட் கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதேவேளை இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளைய தினம் (04) லாகூரில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இதில் வெற்றிப் பெறும் அணியுடன் இந்திய அணி இறுதிப் போட்டியில் மோதவுள்ளதுடன் இறுதிப் போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.