சென்னையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் நேற்றைய தினம் மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்றைய தினம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து அவரது மகள் தயா பிரசாத் பிரபாகர் கருத்து வெளியிட்டுள்ளார்.
“என் அம்மா ஒரு பாடகி, எல்.எல்.பி மற்றும் பி.எச்.டி ஆகியவற்றை ஒரே நேரத்தில் படித்து வருகிறார், இது தூக்கமின்மைக்கு வழிவகுத்தது. தூக்கமின்மையை குணப்படுத்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத்திரையை பரிந்துரைத்தனர். தூக்கம் வராமல் அதிக மாத்திரை எடுத்துக் கொண்டதால் அம்மாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இது தற்கொலை முயற்சி அல்ல.
“என் அம்மாவும் அப்பாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குடும்பத்தில் எல்லோரும் மிகவும் நலமாக இருக்கிறார்கள். தயவுசெய்து எங்கள் விஷயங்களை தவறான முறையில் கையாள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.