இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ICC சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
டுபாயில் நடைபெறவுள்ள குறித்த போட்டியானது இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து, தென்னாபிரிக்க அணியை இரண்டாவது அரையிறுதியில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது.
முன்னதாக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி ஒரு தடவையும் இந்திய அணி தடவைகளும் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.