போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்குச் சென்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25-40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.