உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்ஸில் சிகிச்சைகளின் பின்னர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
எவ்வாறு இருப்பினும் போப் பிரான்ஸ்ஸில் 2 மாதங்கள் கட்டாயமாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.