இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்களை இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே நேற்று (5) நடைபெற்ற விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த விடுதலை இடம்பெற்றது.
இதன் போது நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர்கள் கைது தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததற்காக, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, 119 இந்திய மீனவர்களும் 16 மீன்பிடி படகுகளும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.