போப் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மீளமுடியாத இதய செயலிழப்பு காரணமாக இறந்தார் என்று வத்திக்கான் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி இறப்புச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார்.
திங்கட்கிழமை (21) வெளியிடப்பட்ட 88 வயதான போப்பாண்டவரின் இறப்புச் சான்றிதழில், திங்கட்கிழமை காலை இறப்பதற்கு முன்பு போப் கோமாவில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரான்சிஸ் “பெருமூளை பக்கவாதம், கோமா, மீளமுடியாத இருதய சுற்றோட்டக் கோளாறு” காரணமாக இறந்தார் என்று இறப்புச் சான்றிதழ் கூறுகிறது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் முதல் லத்தீன் அமெரிக்க போப்பாண்டவர் வத்திக்கானில் உள்ள சாண்டா மார்டா இல்லத்தில் உள்ள அவரது குடியிருப்பில் திங்கட்கிழமை காலை 7:35 மணிக்கு (GMT 05:35) இறந்தார் என்றும் அது மேலும் கூறியது.
இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் திறந்தவெளியில் இருந்து போப். ஆயிரக்கணக்கான ஈஸ்டர் வழிபாட்டாளர்களை வரவேற்று, ஒரு உதவியாளர் மூலம் ஆசீர்வாதத்தை வழங்கினார்.
இது அவரது இறுதியும் முக்கியத்துவமான பொதுத் தோற்றமாக அமைந்திருந்தது.
பிரான்சிஸ் தனது 12 ஆண்டுகால போப்பாண்டவராக இருந்த காலத்தின், அண்மைய வாரங்களில் இரட்டை நிமோனியாவின் போது உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுடன் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக அவர் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரோமின் ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் 38 நாட்கள் கழித்தார்.
இறப்புச் சான்றிதழில், பிரான்சிஸ் தமனி உயர் இரத்த அழுத்தம், பல மூச்சுக்குழாய் ஒவ்வாமை மற்றும் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னர் வெளியிடப்படாத நோய்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அவரது உடல் போப்பாண்டவர் ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டு, அவரது அடக்கத்திற்கு முன் பொதுமக்கள் பார்வைக்காக செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப்படும்.
இந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும், செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலும் தினசரி பிரார்த்தனை சேவைகள் மற்றும் ரெக்விம் திருப்பலிகள் நடைபெறும்.