2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸில் நடந்தப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் GT அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய KKR, அணித் தலைவர் ஷுப்மன் கில்லின் 55 பந்துகளில் 90 ஓட்டங்கள், பி சாய் சுதர்சனின் 52 ஓட்டங்கள் மற்றும் ஜோஸ் பட்லரின் 41 ஓட்டங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மெதுவான ஆடுகளத்தில் மூன்று விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களை எடுத்தது.
பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட GT அணியானது இறுதியில் KKR அணியை 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினர்.
பிரசித் கிருஷ்ணா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
துடுப்பாட்டத்தில் கொல்கத்தா அணி சார்பில் அணித் தலைவர் ரஹானே மாத்திரம் 36 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் GT சந்தித்த எட்டு போட்டிகளில் பெற்றுக் கொண்ட ஆறாவது வெற்றியாக இது அமைந்தது.
அதேநேரம், 08 போட்டிகளில் KKR சந்தித்த ஐந்தாவது தோல்வியாகவும் இது அமைந்தது.