2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் மூன்றாவது போட்யை விளையாடிய பின்னர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) ஆட்ட நாயகன் விருதை பெற்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.
14 வயதான இந்த அதிரடி வீரர் வெறும் 38 பந்துகளில் 101 ஓட்டங்களை எடுத்து ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்ததைத் தடுக்க உதவினார்.
வைபவின் இந்த சாதனை 210 என்ற ஓட்ட இலக்கினை துரத்திய RR அணிக்கு 15.5 ஓவர்களில் எளிதாக வெற்றியை பெற்றுத் தந்தது.
போட்டியில் அவர் 11 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகளை அடித்து 35 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தை எட்டினார்.
இதுவரை யாரும் குறைந்த வயதில் டி:20 சதம் அடித்ததில்லை.
இந்த நிலையில் இளம் வயதில் சதம் விளாசிய அந்த பெருமையை அவர் பெற்றார்.
அதேநேரம், ஐ.பி.எல். வரலாற்றில் கிறிஸ் கெயிலுக்குப் பின்னர், வைபவ் இரண்டாவது வேகமான சதம் அடித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு கிறிஸ் கெய்ல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பூனே வோரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்தில் சதம் விளாசியிருந்தார்.
2011 மார்ச் 27 அன்று பீகாரில் பிறந்த வைபவ், இந்த ஆண்டு ஐ.பி.எல்.லில் விளையாடிய இளைய வீரர் ஆவார்.
ஜனவரி 2024 இல் பீகார் அணிக்காக தனது முதல் தர அறிமுகத்தை வெறும் 12 வயது 284 நாட்களில் தொடங்கினார்.
தனது அறிமுகப் போட்டியில், வைபவ் 2024-25 விஜய் ஹசாரே டிரோபியில் பரோடா அணிக்கு எதிராக 42 பந்துகளில் 71 ஓட்டங்களை எடுத்தார்.
பட்டியல் ஏ யில் அரைசதம் அடித்த இளைய இந்தியர் ஆனார்.
சர்வதேச அரங்கில், வைபவ் சென்னையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் சதம் அடித்து, ஒரு இந்தியரின் வேகமான இளைஞர் டெஸ்ட் சதத்திற்கான சாதனையைப் படைத்தார்.
U19 ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
தொடரில் இரண்டு முக்கியமான அரை சதங்களை விளாசினார்.
இந்த நிலையில், வைபவ் 13 வயதாக இருந்தபோது 1.1 கோடி இந்திய ரூபாவுக்கு ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.