நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 370 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி ஹெரோயின் போதைப்பொருளுடன் 149 பேரும் ஐஸ் போதைப்பொருளுடன் 115 பேரும் கஞ்சா போதைப்பொருளுடன் 105 பேரும் கஞ்சா செடிகளுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 144 கிராம் 776 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 306 கிராம் 436 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 418 கிராம் 854 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 500 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.