• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தம்!

பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/05
in இந்தியா, உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

பஹல்காம் தாக்குதலின்  எதிரொலியாக  ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF)  நடத்திய  பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த  தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு,  1960ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக  அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் நீர்மின்சார அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரியாசி மாவட்டத்தில் சலால் அணையின் மதகுகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதிக்கு குறுக்கே உள்ள கிஷன்கங்கா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கு தாம் பக்க பலமாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமியத்–உலமா–,-ஹிந்த்-ன் தலைவர் அர்ஷத் மதானி, சிந்து நதி நீர் நிறுத்தத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘யாராவது தண்ணீரை நிறுத்தினால், அதை நிறுத்தட்டும். இந்த ஆறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் தண்ணீரை எங்கே கொண்டு செல்வீர்கள்? இது எளிதானது அல்ல.

வெறுப்பின் ஆட்சியாக அல்லாமல், அன்பின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு முஸ்லிம், நான் இந்த நாட்டில் வாழ்கிறேன். ஆனால் இங்கு ஊக்குவிக்கப்படும் விஷயங்கள் நாட்டிற்கு ஏற்றவை அல்ல என்பதை நான் அறிவேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: INDIAPakistan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பகிடிவதை சம்பவம்; சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்களுக்கு விளக்கமறியல்!

Next Post

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Related Posts

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!
அமொிக்கா

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15
உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!
இந்தியா

உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15
இலங்கை

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

2025-06-15
3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!
உலகம்

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

2025-06-15
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.
இலங்கை

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
Next Post
மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

வேர்களைத்தேடி விழுதுகளின் பயணம்!-10

வேர்களைத்தேடி விழுதுகளின் பயணம்!-10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

0
உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

0
3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

0
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

0
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15
உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

2025-06-15
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

2025-06-15

Recent News

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15
உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

2025-06-15
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.