இன்று நடைபெற்று வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் வாக்களிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமைதியான முறையில் நடைபெற்று வருகின்ற நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார்.
வாக்களிப்புக்கள் மாலை 4 மணியளவில் நிறைவடைய உள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்கு எண்ணும் பணிகள் மாலை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.















