முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, அவரது இராஜினாமாவை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தம்மிக்க தசநாயக்க கடந்த 2023 ஆம் ஆண்டு மே 25 அன்று பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் , அதே ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் பதவிக்காக அவருக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் உதவித்தொகையும், வாகனம் உட்பட பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் தனது கடமைகளைச் செய்வதற்காக தசநாயக்கவுக்கு சமீபத்தில் ஒரு அமைச்சர் அறையும் ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையில், வாகனங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சில முன்னாள் பாராளுமன்ற அதிகாரிகள் மீது சமீபத்தில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.