பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை சட்டமா அதிபர் நியமித்துள்ளாதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்து விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி, ஜனாதிபதி அலுவலகத்தினால் சட்டமா அதிபருக்கு கடந்த மாதம் 29ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டது.
கடந்த மாதம் 10ஆம் திகதி பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் இடம்பெற்றிருந்தது.
25 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், குறித்த அறிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை சட்டமா அதிபர் நியமித்துள்ளாதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (18) தெரிவித்துள்ளது.