பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் இன்று (19) முதன் முறையாக விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு கடந்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் கூடி ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த.
இதன்படி, இன்று முதல் மேற்படி விடயம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை குழு ஆரம்பிக்கவுள்ளது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை இன்று குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதற்கமைய அவர் அன்றையதினம் முதல் தடவையாக குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
இந்தக் குழு கடந்த 15 ஆம் திகதியும் நடாளுமன்றத்தில் கூடி விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்துக் கலந்துரையாடியது.
இதற்கமைய இந்த விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற குழு அறை 8 இல் கூடவுள்ளது.