சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், தூதரகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் மிரட்டல் விடுத்த மர்ம் நபர்கள் குறித்து ராயப்பேட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















