கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முன்னிலையில் அவர் இன்றைய தினம் இரண்டாவது முறையாக பிரசன்னமாகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தலைவராக, உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன செயற்படுவதுடன், நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ்துறை ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏகநாயக்க ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.
குறித்த ஆணைக்குழு முன்னிலையில் கடந்த 19 ஆம் திகதி பிரசன்னமான தேசபந்து தென்னக்கோன், அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்த போதும் அவை நிராகரிக்கப்பட்டன.
இதன்போது, அவருக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரமும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














