2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு இந்த நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவில் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பணவீக்கத்தால் மக்கள் தற்போது பயனடைந்து வந்தாலும், 2021 உடன் ஒப்பிடும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.