இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (08) நடைபெறவுள்ளது.
பிரிஸ்டல் மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.