பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்தார்.
உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தை (ஓகஸ்ட் 1) முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது நாட்டில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














