இரசிகர்களால் கொண்டாடப்பட்ட சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் மீண்டும் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் ‘அஞ்சான்’.
இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா கதாநாயகியாக நடித்ததுடன் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
கமர்ஷியல் படமாக வெளிவந்த அஞ்சான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படத்தை செம்மையாக்கம் செய்து மீண்டும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், அஞ்சான் படத்தை விரைவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் அறிவித்துள்ளது.
‘பாட்ஷா’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சச்சின்’, ‘வாரணம் ஆயிரம்’, ஆகிய படங்கள் மீள் திரையிடல் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றதை தொடர்ந்து “அஞ்சான்” படமும்மீள் திரையிடல் செய்யப்பட உள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















