குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழும், நேர வரம்புகளுக்குள்ளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக நிபுணர் ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.














