அரசாங்கத்தின் புதிய தங்குமிடமின்மை தடுப்பு திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வீட்டுவசதி செயலாளர் ஸ்டீவ் ரீட் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண 3.5 பில்லியன் பவுண்ட்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தங்குமிடமின்மையை அரிதான, குறுகிய, மற்றும் மீண்டும் நிகழாத ஒன்றாக மாற்றும் இலக்கை வலியுறுத்துகிறார்.
இருப்பினும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த திட்டம் தேவையானதை விட குறைவானதாகவும், முக்கிய இடைவெளிகளைக் கொண்டதாகவும் இருப்பதாக விமர்சிக்கின்றனர்.
குறிப்பாக, கிரிஸிஸ் போன்ற அமைப்புகள், அறிவிக்கப்பட்ட நிதியில் ஒரு சிறிய பகுதியே புதிய நிதி என்று வாதிடுகின்றன, மேலும் இந்த திட்டம் விரைவாக வெளியிடப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
ஷெல்டர் என்ற அமைப்பு, இங்கிலாந்தில் 3 இலட்சத்து 82 ஆயிரத்து 618 பேர் இந்த கிறிஸ்துமஸ்க்கு தங்குமிடமின்றி இருப்பார்கள் என்று எச்சரிப்பதுடன் அரசாங்கம் நீண்ட கால தங்குமிடமற்றவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைப்பது மற்றும் தங்கும் விடுதிகளில் குடும்பங்கள் செலவிடும் நேரத்தை குறைப்பது போன்ற முக்கிய உறுதிமொழிகளை அளித்துள்ளது.















