அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகளை ஆழப்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக அவர், இலங்கையின் பல அதிகாரிகளை சந்திப்பார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் இலங்கையும் பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் இரு நாட்டு மக்களின் செழிப்புக்கான பரஸ்பர அர்ப்பணிப்பில் வேரூன்றிய வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம், சுதந்திரமான, திறந்த மற்றும் மீள்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை முன்னேற்ற அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயல்படுகின்றன என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து இலங்கையுடன் மூலோபாய கூட்டாண்மையைக் கட்டியெழுப்புகிறது என்றும், டித்வா சூறாவளியின் பேரழிவு தாக்கங்களுக்கு இலங்கை மக்கள் பதிலளிக்கும் போது அவர்களுடன் நிற்கிறது என்றும் அறிக்கை மேலும் கூறியுள்ளது.














