கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் (TK 733), தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து இன்று (17) அதிகாலை 12:28 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.
துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட அவசர சூழ்நிலை இருந்தபோதிலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏனைய விமானங்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழப்பு தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்தான்புல்லுக்கு திட்டமிடப்பட்ட சேவையை இயக்கும் ஏர்பஸ் A330 விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக அவசர தரையிறக்கத்திற்கு முன்னதாக எரிபொருளை எரிக்க காற்றில் வட்டமிட்டது.
தரையிறங்களுக்கு முன்னர் பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மருத்துவ அவசர குழுக்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானக் குழுவினர் நிலையான அவசர நெறிமுறைகளைப் பின்பற்றி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்.
பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.















