கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போனவிடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்பிரிவில் 72 மணித்தியால தடுப்புக்காவில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்
இதேவேளை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போதைப்பொருள் கடத்தல்காராருடன் தொடர்பினை பேணிவந்துள்ளாரா அல்லது அந்த குழுவினரை வழிநடத்தியுள்ளாரா என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்
கடந்த 2019 ஆம் ஆண்டு, திட்டமிடப்பட்ட குற்றச்செய்லகிளல் ஈடுபட்டிருந்த ‘மாகந்துரே மதூஷிடம்’ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.
இந்த துப்பாக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ராணுவத்தினரால் டக்ளஸ் தேவாநந்தாவிற்கு வழங்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
விசாரணைகளின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்
இதனையடுத்து டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த
எனினும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணை நிமித்தம் நீதிமன்றில் 72 மணி;த்தியால தடுப்புக்காவல் உத்தரவினை பெற்றிருந்தனர்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்72 மணித்தியால தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்
















