பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த பெண்ணிடம் இருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.














