கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 268.40 மில்லியன் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஷ் போதைப்பொருட்களை தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பைக்கு கொண்டு வந்திருந்ததுடன் அங்கிருந்து இன்று காலை கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று காலை 07.50 மணிக்கு இண்டிகோ விமானம் 6.E -1185 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
சந்தேகநபர்களில் இரண்டு பேர் பொரளையை சேர்ந்தவர்கள் என்றும் ஏனைய இரு பெண்களும் தெமட்டகொட மற்றும் ஒருகொடவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள், தங்கள் பயணப் பொதிகளில் 20 பொதிகளாக் 20 கிலோ 684 கிராம் நிறையுடைய “குஷ்” போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

















