• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம் – ஜனாதிபதி

எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம் – ஜனாதிபதி

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் மூன்றாவது அமர்வு, மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்றது.

இதன்போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட  பன்முக அணுகுமுறையின் மூலம் நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் “போதைப்பொருள் அற்ற நாடு –  மகிழ்ச்சியான நாளை” என்ற தொனிப்பொருளின் கீழ் “ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் அரசாங்கம், பாதுகாப்புப் பிரிவுகள், சிவில் அமைப்புகள் மற்றும் அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்து, ஒரு தேசிய முன்னணியாக இது செயல்படுகிறது.

போதைப்பொருள் தொடர்பாக தற்போது இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் புனர்வாழ்வு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

2025.01.01 முதல் 2026.01.05 வரையிலான காலப்பகுதியில், 1821.174kg ஹெரொயின், 3865.710kg ஐஸ், 17189.377kg கஞ்சா, 38.958kg கோகேன் மற்றும் 4,049,569 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உடனடியாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை வகுப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

போதைக்கு அடிமையானவர்களின் சமூகத் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த தேசிய வேலைத்திட்டத்தை பரவலாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையில் செயற்படும் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கிராமத்திற்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி, மதத் தலைவர்களின் பங்கேற்புடன் பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

No photo description available.

மல்வத்து தரப்பின் அனுநாயக்க வண, நியங்கொட விஜிதசிறி, அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க வண, நாரம்பனாவே ஆனந்த, ராமன்ய மகா நிகாயவின் அனுநாயக்க வண, வலேபொட குணசிறி, வண, குப்பியாவத்தை போதானந்த, ஆகிய தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் அருட் தந்தை நிஷாந்த பெர்னாண்டோ, ஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள், ஷேக் முகமது அர்கம் நூராமித் மௌலவி உட்பட மதத் தலைவர்கள், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related

Tags: anura kumara dissanayakeDrugஅநுரகுமார திசாநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குறைந்த காற்றழுத்த தொடர்பில் எச்சரிக்கை!

Next Post

கொஹுவல துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!

Related Posts

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு!
இலங்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!

2026-01-08
10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
இலங்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை – சபை முதல்வர்

2026-01-08
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!
இலங்கை

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

2026-01-08
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அப்டேட்!

2026-01-08
ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு: இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்பின் 500% வரி!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு: இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்பின் 500% வரி!

2026-01-08
கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொட, கரித்தகந்தை பகுதிக்கு அருகே விபத்து – ரயில் சேவைகள் பாதிப்பு!
இலங்கை

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொட, கரித்தகந்தை பகுதிக்கு அருகே விபத்து – ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-01-08
Next Post
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கொஹுவல துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!

அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா!

அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா!

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு!

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!

0
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

0
10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை – சபை முதல்வர்

0
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!

2026-01-08
10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை – சபை முதல்வர்

2026-01-08
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

2026-01-08

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அப்டேட்!

2026-01-08
ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு: இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்பின் 500% வரி!

ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு: இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்பின் 500% வரி!

2026-01-08

Recent News

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!

2026-01-08
10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை – சபை முதல்வர்

2026-01-08
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

2026-01-08

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அப்டேட்!

2026-01-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.