ஆப்பிரக்க நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (12) காலை இலங்கை வந்தடைந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்,
இன்று (12) காலை இலங்கைக்கு ஒரு குறுகிய விஜயம் மேற்கொண்டிருந்த சீன மக்கள் குடியரசின் வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்கள் விவாதங்கள் வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தின.
டித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்தும் விவாதங்கள் கவனம் செலுத்தின – என்றார்.
பாதிக்கப்பட்ட அடையாளம் காணப்பட்ட சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு சீன அரசாங்கத்தின் உதவியை தாம் குறிப்பாகக் கோரியதாக அமைச்சர் ஹெராத் மேலும் கூறினார்.
இதன்போது சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, மேற்படி கோரிக்கையில் தனது தனிப்பட்ட தலையீட்டை உறுதிசெய்தார்.
மேலும் இலங்கை விரைவில் மீட்சியடைய சரியான பாதையில் உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் சீன அரசாங்கத்தின் முழு ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தினார் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.













