எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த இறுதி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்தும் சிக்கல் நீடிக்கிறது.
‘ஜன நாயகன்’ படம் தொடர்பாக எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்பட தணிக்கை விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.
















