கம்பஹாவில் கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்லதே பிரதேசத்தில் 22 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொல்லதே பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பொல்லதே பிரதேசத்தைச் சேரந்த 48 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் உள்ள அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 345 போதை மாத்திரைகளும் 4 கிலோ கொக்கேயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட பெண்ணுக்கு சொந்தமாக கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் களியாட்ட விடுதி ஒன்று இருப்பதாக பொலிஸ் விசாரணையைில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்














