பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
இந்த இரு நாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைதி மற்றும் உக்ரைன் ஆதரவில் இணைந்து செயல்படவும், முக்கிய கனிமவள வர்த்தகத்தை மேம்படுத்தவும் முயல்கின்றன.
டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் சானே தகைச்சியை இங்கிலாந்துக்கு வருகை தருமாறு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு “பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு” வலிமையானது என்று குறித்த சந்திப்பு குறித்து பிரதமர் கூறியுள்ளார்.
சீனாவிற்கான நான்கு நாள் பயணத்திற்குப் பின்னர் பிரதமர் ஜப்பான் சென்றுள்ளார்.
இதன்போது அவர் பெய்ஜிங்குடனான இங்கிலாந்தின் உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றார்.
இங்கிலாந்து மற்றும் ஜப்பான் தலைவர்கள் தங்கள் “கூட்டு மதிப்புகள்” குறித்து விவாதித்ததாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கூட்டாண்மைகளை அதிகரிப்பது உட்பட வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மைக்கு “வலிமையுடனும் தெளிவுடனும்” பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை தானும் தனது ஜப்பானிய சகாவும் ஒப்புக்கொண்டதாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மேலும் கூறியுள்ளதுடன் “உக்ரைனை ஆதரிப்பதில் உறுதியான தலைமைக்கு” அவருக்கு நன்றியும் தெரிவித்தார்.

















