எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் அமெரிக்க காங்கிரஸில் சாட்சியமளிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க காங்கிரஸில் சாட்சியமளிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், பரிந்துரைத்துள்ளார்.
சாட்சியமளிப்பதைப் பொறுத்தவரை, தகவல் உள்ள எவரும் அந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
எப்ஸ்டீன் தொடர்பான சமீபத்திய ஆவணங்கள் வெளியான பின்னர் பிரதமரின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
இதேவேளை பாலியல் குற்றவாளியுடனான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டனின் தொடரர்பு குறித்து விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் அவர் அந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் மறுத்துவருகின்றார்.
இந் நிலையில் காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த நவம்பர் மாதம் எப்ஸ்டீன் விசாரணையின் ஒரு பகுதியாக மவுண்ட்பேட்டன்-வின்ட்சரைக் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மூன்று மில்லியன் பக்க ஆவணங்களை வெளியிட்டது.
அதில் எப்ஸ்டீன் குற்றங்களில் ஈடுபட்டமை தெளிவாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எப்ஸ்டீனுடனான தனது கடந்தகால நட்பின் மீது பல ஆண்டுகளாக விமர்சனங்களை எதிர்கொண்ட மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் மீது இந்த படங்கள் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

















