யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடுக்குளாய் அபாய வெளியேற்ற பாதை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் கடந்த சில மாதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
வடமராட்சி கிழக்கு மக்களினுடைய முக்கிய அபாய வெளியேற்றப் பாதையாக காணப்படும் குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த வீதி புனரமைப்பு பணிகள் நிறைவுகட்டத்தினை அண்மித்துள்ள நிலையில் புனரமைப்பு செய்யப்பட வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளது.
சில பகுதிகளில் அதிகளவிலான வெடிப்பு ஏற்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிந்தது.
வீதிபுனரமைப்பு பணிகள் நிறைவுகட்டத்தினை அண்மித்துள்ள நிலையில் நிலம் தாழிறங்கியுள்ளமையானது மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.












