பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்
பங்களாதேஷில் எதிர்வரும் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதேவேளை நிர்வாக அதிகாரத்தைக் குறைப்பதற்கான பொதுவாக்கெடுப்பும் ஒரே நாளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் , தேர்தல் மற்றும் பொதுவாக்கெடுப்பில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு பங்களாதேஷ் அழைப்பு விடுத்துள்ளது .
பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் , பங்களாதேஷ் மீது இந்திய மத்திய அரசு பெரும் அதிருப்தியில் இருக்கிறது . எனவே இ இந்தியா தனது பார்வையாளர் குழுவை அனுப்புவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை .
பங்களாதேஷின் இடைக்கால அரசு வெளியிட்ட தகவலின்படி இதுவரை மொத்தம் 330 சர்வதேச பார்வையாளர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர் .
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு , ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஆறு சர்வதேச அமைப்புகள் பார்வையாளர்களை பங்களாதேஷிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர் .
அதேபோல , 16 நாடுகள் பல்வேறு சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 32 தனிப்பட்ட நபர்கள் என பலர் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ,
‘ கடந்த 2024 இல் இடம்பெற்ற தேர்தலை விட இந்த முறை இரு மடங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை இருக்கும் ‘ என்று தெரிவித்துள்ளது.
















