அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் குடிவரவு அதிகாரிகளால் இரண்டு குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத்துறை ((ICE) உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் உடனடியாக உடல் கெமராக்களை (Body Cameras)) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் செயலாளர் கிறிஸ்டி நோம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட அலெக்ஸ் ப்ரெட்டி என்ற தாதியிடம் ஆயுதம் இருந்ததாக அதிகாரிகள் முதலில் கூறினாலும்இ வெளிவந்த காணொளி ஆதாரங்கள் அவர் கையில் கைபேசி மட்டுமே இருந்ததை உறுதி செய்தன.
இந்த முரண்பட்ட தகவல்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி ஆதாரங்களுக்கு ஏற்ப இந்த உடல் கெமரா திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும், இது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















