“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று (04) இலங்கை கடற்படை கப்பல் சயுரவில் மதியம் இடம்பெற்றது.
குறித்த துப்பாக்கி சூடு மரியாதை சுதந்திர தினம் அல்லது தேசத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தினத்தில் நடத்தப்படுகின்றது.
ஒரு விழாவில் அதிகபட்சமாக சுடக்கூடிய வெடிகளின் எண்ணிக்கை 25 ஆகும், மேலும் இது தேசத்தின் சார்பாக வழங்கப்படும்.
அதன்படி, இன்று (04) 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பு, காலி முகத்திடல் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை கடற்படை கப்பல் சயுரவில் இருந்து 25 துப்பாக்கிச் சூடு மரியாதை நடத்தப்பட்டது.

14 ஆம் நூற்றாண்டிலிருந்து, இந்த துப்பாக்கி சூடு மரியாதை போர்க்கப்பல்கள் பின்பற்றியுள்ளது.
அங்கு ஒரு போர்க்கப்பல் நட்பு நாடுக்குள் நுழையும் போது, ஆயுதம் நிராயுதபாணியாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கப்பலின் ஆயுதங்களில் ஏற்றப்பட்ட தோட்டாக்கள் பற்றவைக்கப்படுகின்றன.
மேலும், நட்பு தேசத்தின் கடலோரப் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் பாதுகாப்பான திசையை இலக்காகக் கொண்டு, அந்த ஆயுதங்களில் நிரப்பப்பட்ட தோட்டாக்கள், ஆயுதம் நிராயுதபாணி என்று வரும் கப்பலுக்கு உறுதியளிக்கும் வகையில் மேற்கொண்டுள்ளனர், பின்பு தாமதமாக இது வாழ்த்தும் சடங்காக மாறியுள்ளது.
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டின் வரலாற்றைப் பார்க்கும் போது, முதன்முறையாக 1948 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று காலி முகத்திடம் மைதானத்தில் அரச கடற்படையினரால் 15 துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது.
1949-ம் ஆண்டு விஜய கப்பலில் ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி இந்த துப்பாக்கி சூடு நிகழ்வு நடைபெற்றது.
1948 ஆம் ஆண்டு முதல் தொடக்கமாக இந்த வணக்கம் கடற்படையினரால் தொடர்ச்சியாகமேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், ஆரம்பத்தில் காலி முகத்திடலும், பின்னர் கப்பல்களிலும், கொழும்பு துறைமுகத்தில் கோல் பக் பே இடத்திலும் கொழும்பு கலங்கரை விளக்க வளாகத்திலும் இந்த மரியாதை செலுத்தப்பட்டது.















