வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் இன்று யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் பாழடைந்துள்ள வீதிகளை புனரமைக்கும் நோக்கில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் அபவிருத்தி திடடம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று ஆவரங்கால், தொண்டமனாறு வீதியினை புனரமைக்கும் வேலைத்திட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து கொண்டுள்ளதுடன் ஆரம்ப நிகழ்வு அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்சில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க கலந்து கொண்டு வீதிக்கான பதாகையினை திறந்து வைத்துள்ளார்.
ஆவரங்கால், தொண்டமனாறு வீதியின் சுமார் 6.03 கிலோமீற்றர் தற்போது புனரமைக்கப்படவுள்ளது. இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைதிட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் 12திகதி நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வீதியினை புனரமைப்பதற்காக சுமார் 680 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் வடமாகாண ஆளூநர் நா,வேதநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். பவானந்தராசா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன், வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.














