2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது.
தொடரில் இலங்கை அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பெற்று சிறந்த ஃபார்மில் உள்ளது.
முதல் போட்டியில் அயர்லாந்தை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும், இரண்டாவது போட்டியில் ஓமானை 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும் வெற்றி பெற்றது.
அதேநேரம், தொடரில் அவுஸ்திரேலியா ஃபார்முக்கு திரும்புவதற்கு போராடி வருகிறது.
அயர்லாந்தை வீழ்த்தி தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர், சிம்பாப்வே அணிக்கு எதிராக தடுமாறி 170 ஓட்ட இலக்கை நோக்கிச் செல்லும்போது 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இலங்கையுடனான இன்றைய போட்டியானது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
தொடரை இணைந்து நடத்தும் இலங்கை அணியானது, இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சூப்பர் 8 இடத்தைப் பெறுவதை நோக்காகக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், அவுஸ்திரேலியா தனது பயணத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இன்றையப் போட்டியில் கடுமையாக போராடும்.
இதவேளை, இன்று நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரின் 29 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















