முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மூன்று வார காலம் ஒதுக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்திற்கான தனது முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை (CEB) அண்மையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுக்கு அண்மையில் சமர்ப்பித்தது.
அதன்படி, இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தில் 13.56% அதிகரிப்பைக் கோரியுள்ளது.
2026 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்திற்கு இந்த திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.













