தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் உள்வாங்குதல் நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் யாழில் sond நிறுவனத்தின் ஊடாக, யாழ் சர்வ மதக் குழுவுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் DIRC கூட்டம் நேற்று நல்லூர் சட்டநாதர் சிவன் கோயில் சங்கிலியன் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தினை யாழ். மாவட்ட சர்வ மத குழுவின் இணைப்பாளர் ச.ஜென்சி நெறிப்படுத்தினார்.
சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசாவினால் நல்லிணக்க செயற்பாடுகளை ஏற்படுத்த யாழ் மாவட்ட சர்வ மத குழு செய்ய வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து இக்னேசியஸ் கிளானியால் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக கருத்துரை வழங்கப்பட்டது.



















