2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (19) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியானது இன்று பிறப்கல் 3.00 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆட்டத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தங்கள் குழு நிலைப் போட்டியை நிறைவுக்கு கொண்டு வரும்.
இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8-ல் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தப் போட்டியில் தகுதிச் சுற்றுக்கான அழுத்தம் இல்லை.
இலங்கை இதுவரை தங்கள் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, சிறப்பாக விளையாடியுள்ளது.
அதே நேரத்தில் சிம்பாப்வே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அற்புதமான வெற்றியை சந்தித்த பின்னர் முழு நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.


















