கடந்த 2017 ஆம் ஆண்டு பாலம் பயங்கரவாதத் தாக்குதலில் முதல் நபராகப் பணியாற்றிப் பாராட்டு பெற்ற காவல்துறை அதிகாரி (Mr Luker ) மார்க் லூக்கர், வாட்ஸ் அப் குழுக்களில் இனவெறுப்புத் தூண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
நாடோடி மற்றும் சிறுபான்மையின சமூகத்தினரைத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி இவர் அனுப்பிய கேலிச் செய்திகள் மற்றும் இழிவான சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய ஒழுங்குமுறை ஆணையம், அவரது செயல்பாடுகள் கடுமையான நடத்தை மீறல் என்று உறுதி செய்தது.
அந்த அதிகாரி இதனை ஒரு நகைச்சுவையாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கும் வழியாகவும் கருதினாலும், அச்செயல் பார்பட்சமானது என்று குழு முடிவு செய்தது.
இதேவேளை, இவருக்கு வழங்கப்பட இந்த தண்டனையானது ஒரு காவலரின் தனிப்பட்ட கருத்துக்கள் எவ்வாறு அவரது தொழில்முறை நற்பெயருக்கு முற்றுப்புள்ளி வைத்தன என்பதை விளக்குகின்றன.
இதேவேளை, சம்பவம் குறித்து (Mr Luker ) மார்க் லூக்கர் தனபாக்க நியாயங்களை கூறினாலும் சிறுபான்மையினரை இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதை அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை வலியுறுத்துகிறது.













